அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Thursday, May 31, 2012

அன்புள்ள சங்மாவுக்கு.........

சொந்த வீட்டுலேயே சோறு இல்லேன்னு சொல்லிட்டாங்க.....

பக்கத்து வீட்டுக்காரம்மா தர்றேன்னு சொன்ன
பாயாசத்த நம்பி இப்புடி பசியோட பதவிக்களத்துல
குதிச்சுட்டீங்களே.........

பாவம் சார் நீங்க ............

உங்களப் பாக்கையில......
மதுரை வீரன் கோயிலும்
மஞ்சத்தண்ணி தெளிக்கப்பட்ட ஆடும்-என்
நினைவுக்கு வர்றத தவிர்க்கவே முடியல ........

1999 ல புள்ளைய கிள்ளிவிட்டுட்டு
2012 ல தொட்டிய ஆட்டி விடுறீங்களே........
என்ன கொடும சார்................

சரி சரி அத விடுங்க ...........

அவனவன்
கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்காக
கொலையே பண்ணுரானுங்க........

நீங்க ஜனாதிபதி பதவிக்காக
ஜஸ்ட் ஒரு மன்னிப்புத்தான கேட்டீங்க...........

பாபர் மசூதிய இடிச்சவங்களுக்கே...... அய்யய்யோ
தப்பா சொல்லிட்டேன்
பாரதீய ஜனதாக் கட்சிக்கே பதிமூணு நாள்தான்
ஆதரவு இருந்துச்சுங்கிறத
எதுக்கும் ஒரு மூ(ளை)லைல போட்டு வச்சுக்கங்க ..........


அமெரிக்க கருப்பினத்தை சேர்ந்த ஒருவர்
அங்கே அதிபராகும் போது
இந்தியப் பழங்குடியாகிய நான்
இங்கே ஆகக்கூடாதானு கேக்குறீங்களே

அது எப்புடி சார்
உங்களால மட்டும்
பருவமழைல பட்டாசு வெடிக்க முடியுது .......?

அப்புடியே 1988 ல இருந்து
இன்னிக்கு வரைக்கும்
அந்தப் பழங்குடிகளுக்கு நீங்க செஞ்ச
நல்லதை எல்லாம் பட்டியல் போட்டுருந்தீங்கன்னா
நல்லா இருந்துருக்கும் .........

50 வருஷ பாராளுமன்ற பாரம்பரியத்துல
1996 ல எதிர்க்கட்சில இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட
முதல் மக்களவை சபாநாயகர் நீங்கதான்கிறதும் ......

உங்களோட நுட்பமான அரசியல் அறிவுக்கு
இப்பவரைக்கும் சாட்சியம் வகிச்சுக்கிட்டிருக்கிற
A Life in politics என்ற உங்களோட புத்தகமும்......
உங்களுக்கு பெருமை சேக்குற விஷயங்கள்
என்பதில் மாற்றுக்கருத்தே இல்ல........

ஆனா........

அரசு செலவுல ஒலகம் சுத்த
ஆசைப்பட்டு........
சொந்த செலவுல சூனியம்
வச்சுக்கிறீங்களோ..............??????? னு
எனக்கு தோனுது..............

- அறந்தாங்கியான் -

Wednesday, May 30, 2012

என் அன்பான நேற்றுகளுக்கு........

முன்குறிப்பு 


வெறும் யதார்த்தங்களை மட்டும்
என்னுடன் வைத்துக்கொண்டு,
எழுத்து வானத்தை ஏக்கத்துடன்
பார்த்துக்கொண்டிருந்த என் முதுகில்
சிறகுகளைப் பொருத்தி .......

'' பயம் தவிர்த்துப் பற........'' என்று சொன்ன
அன்பு நண்பன் ரஹீம் கஸாலி  யோடு
தொடங்கும் முன் ஒரு வார்த்தை.......

நன்றி நண்பனே
சிறகு தந்த உன் நட்பிற்கு...............


                                                               

Tuesday, May 29, 2012

ஹி.... ஹி.........

போக்குவரத்து துறை அமைச்சர்
வருகிறார் .............

போஸ்டர் ஒட்டப்பட்டது
அரசுப் பேரூந்துகளில்..............


#இதுக்கு தலைப்பு ஒரு கேடா..............????

இணைய(யா) க்காதல்



எழுதி முடித்தகவிதையில் என்னை
முற்றுப்புள்ளியக்கிவிட்டு
அடுத்த கவிதைக்கு நீ
ஆயத்தமாகி விட்டாய்.......

தவறொன்றுமில்லை .......

வாசிக்கவே நாதியற்று கிடக்கும்
கவிதையில்
முற்றுப் புள்ளியின் கண்ணீருக்கென்ன
முக்கியத்துவம்?

காதல் ஒப்பனை கலைத்து வீசி
யதார்த்தம் பூசிக்கொண்டு நீ
இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பி விட்டாய் .........

இயல்பே காதலாகிப் போனதால்தானோ என்னவோ....
கலைக்கவும் தெரியாமல் கழுவித்
தொலைக்கவும் முடியாமல் நான்......

அன்றெனக்குத் தெரியவில்லை......
நான் அகத்தில் பூசிய காதலை நீ
நகத்தில் பூசியிருந்தாய் என்று ............

சூழ்நிலையின் முதுகில்
காரணங்களை அடுக்கிவிட்டு
நானற்ற திசையில் நீ
பயணத்தை தொடங்கி விட்டாய்........

ஒரு பயணத்தின் நடுவே சிறகுடைந்து
விடியாத இரவுக்குள் வீழ்ந்து கிடக்கிறேன் நான் ......

உன்னிடம் பதிலில்லாத ஒரு கேள்வி
என்னிடம் பாக்கி இருக்கிறது......

அன்று உன்னை மட்டும்
சுமந்த இதயத்தில்
இன்று உன் நினைவுகளைச்
சுமக்கிறேன் .........

அன்று என்னை மட்டுமே
சுமந்த இதயத்தில் இன்று நீ
எவனையோ சுமக்கிறாய் ......

எப்படி முடிகிறது உன்னால் மட்டும்.......

உன்னைக் காயப் படுத்துவதற்காய் அல்ல.......
குடித்துக் குடித்துச் செரிக்க முடியாததை
எழுத்துக்களால் எரிக்க முயற்சிக்கிறேன்......

இணையக் காதலின்
இணையா கதல்களில் இனி
நமது காதலும் .....
இல்லை இல்லை
எனது காதலும்.........

_ அறந்தாங்கியான் _

Sunday, May 27, 2012

இலவசங்களுக்கு பலியாகும் இரைகள்




இலவச அரசியை கோழித்தீவனமாய் பயன்படுத்துகிறார்கள் - செய்தி .

கொழுப்பெடுத்தவர்கள் செய்யும் காரியம் இது.........

இலவசங்கள் சரியா தவறா என்ற அடிப்படை விசயத்திலேயே நம்மால் இன்னும் ஒரு சரியான முடிவுக்கு வரமுடியவில்லை.......

கல்வியையும் சுகாதாரத்தையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு 

கணிப்பொறியையும் கால்நடையையும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசுத் திட்டங்களின் பிண்ணனியில் நிஜமாகவே மக்கள்நலம் இருக்கிறதா....... ???

இழந்த பதவியைப் பிடிப்பதற்கோ அல்லது இருக்கும் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ ஆன இவர்களின் அரசியல் பந்தயத்தில் நாம் பலியாடுகள் என்பதுதானே உண்மை ........???

கொடநாடும் கோபாலபுரமும் கோடி கோடியாய் கொள்ளையடிப்பது தெரிந்தும்,.குடமும் குத்துவிளக்கும் கொடுத்தால் கோகிலா ஓட்டுப்போடுகிறாள்.......

குவார்ட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் கோவிந்தன் ஓட்டுப்போடுகிறான் .......

இலவசத்திட்டங்கள் அரசின் குற்றம் எனில் அதற்கு அதிகாரம் கொடுத்தது யார் குற்றம்??????

வேட்டை நாய்களுக்கு ஓட்டுப்போட்டு கோட்டைக்கு அனுப்பிவிட்டு , கடிக்கும்போது மட்டும் கதறுகிறோம்........
காயம் ஆறினால் கடித்ததை மறப்போம்.....

மறுபடியும் கொடிபிடித்து கோஷம் போட்டு ஓட்டுப்போட்டு அரியனையில் ஏற்றிவைத்து அழகு பார்ப்போம்........

நமக்கென்ன நாம் எப்போதும் "இரைகள்"தானே............