அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Sunday, May 27, 2012

இலவசங்களுக்கு பலியாகும் இரைகள்




இலவச அரசியை கோழித்தீவனமாய் பயன்படுத்துகிறார்கள் - செய்தி .

கொழுப்பெடுத்தவர்கள் செய்யும் காரியம் இது.........

இலவசங்கள் சரியா தவறா என்ற அடிப்படை விசயத்திலேயே நம்மால் இன்னும் ஒரு சரியான முடிவுக்கு வரமுடியவில்லை.......

கல்வியையும் சுகாதாரத்தையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு 

கணிப்பொறியையும் கால்நடையையும் இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசுத் திட்டங்களின் பிண்ணனியில் நிஜமாகவே மக்கள்நலம் இருக்கிறதா....... ???

இழந்த பதவியைப் பிடிப்பதற்கோ அல்லது இருக்கும் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ ஆன இவர்களின் அரசியல் பந்தயத்தில் நாம் பலியாடுகள் என்பதுதானே உண்மை ........???

கொடநாடும் கோபாலபுரமும் கோடி கோடியாய் கொள்ளையடிப்பது தெரிந்தும்,.குடமும் குத்துவிளக்கும் கொடுத்தால் கோகிலா ஓட்டுப்போடுகிறாள்.......

குவார்ட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் கோவிந்தன் ஓட்டுப்போடுகிறான் .......

இலவசத்திட்டங்கள் அரசின் குற்றம் எனில் அதற்கு அதிகாரம் கொடுத்தது யார் குற்றம்??????

வேட்டை நாய்களுக்கு ஓட்டுப்போட்டு கோட்டைக்கு அனுப்பிவிட்டு , கடிக்கும்போது மட்டும் கதறுகிறோம்........
காயம் ஆறினால் கடித்ததை மறப்போம்.....

மறுபடியும் கொடிபிடித்து கோஷம் போட்டு ஓட்டுப்போட்டு அரியனையில் ஏற்றிவைத்து அழகு பார்ப்போம்........

நமக்கென்ன நாம் எப்போதும் "இரைகள்"தானே............

2 comments:

  1. வேட்டை நாய்களுக்கு ஓட்டுப்போட்டு கோட்டைக்கு அனுப்பிவிட்டு , கடிக்கும்போது மட்டும் கதறுகிறோம்........
    காயம் ஆறினால் கடித்ததை மறப்போம்.....

    மறுபடியும் கொடிபிடித்து கோஷம் போட்டு ஓட்டுப்போட்டு அரியனையில் ஏற்றிவைத்து அழகு பார்ப்போம்........

    அறந்தாங்கிய வரிகள் !

    ReplyDelete