அறந்தாங்கியானை பார்வையிட வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

Saturday, June 16, 2012

நித்யானந்தா TO டெல்லி

கடந்த பத்து நாட்கள் நிலவிய பரபரப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது,
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் டெபாசிட் கிடைத்த சந்தோஷத்தில் தேமுதிக ........

ஆன்மீகப் புலிக்கு ஜாமீன் கிடைத்ததில் மதுரை மூத்த ஆதீனத்தின் முகம் மலர்ந்திருக்கிறது .........

பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராய் அறிவித்த அடுத்த நிமிடம் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் ஆதரவு என்ற புள்ளிவிபரம் காங்கிரசின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.........

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு ஆன்மீக மடத்திற்கு, சில காலங்களுக்கு முன் ஆவிகளுடன் பேசிக்கொண்டிருந்த அருணகிரி ஞான தேசிகர் மூத்த ஆதீனம், ரஞ்சிதாவை ரகசிய அறையில் கொஞ்சிக்கொண்டிருந்த நித்யானந்தா இளைய ஆதீனம்......
ஆன்மீகமும் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான சமகால சாட்சிகள் இவை......

ஆதீனம் ஆவதற்கு அடிப்படைத்தகுதி விபச்சாரம் செய்யத் தெரிந்திருத்தல் என்ற விஷயம் உறுத்துகிறது............ ஆன்மீகத்திருமடங்கள் அந்தப்புறங்கள் ஆகிவிடாமல் இருந்தால் சரி.............

                                                     ..........*...........*...........*

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது, வழக்கம்போல் முலாயம் பல்டி அடிக்க மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் மம்தா........ பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு கேவலங்களை உற்று கவனித்தவர்களுக்கு புரிந்திருக்கும்........ தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள காங்கிரஸ் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து இறங்கிப் போகும் என்று......


என்ன காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அப்துல் கலாம் எனும் தமிழரை பரிந்துரை செய்து அந்த முடிவில் இன்னும் உறுதியாகவே இருக்கும் மம்தாவிற்கு எனது தமிழ் சல்யூட்............

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் திமுக அந்தக்காலம் முதலே முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்ற பல்லவியை சீசன் மேடைகளில் தொடர்ந்து முழங்கி வரும் திராவிட முன்னேற்ற குடும்பத்திடம் ஒரு கேள்வி........

முக்கியப் பங்களிப்பு என்பது என்ன??????????

மத்தியில் ஆளும் தன் கூட்டணிக் கட்சி முன்மொழியும் பெயரை அட்சரம் பிசகாமல் அப்படியே வழிமொழிவதுதான் முக்கியப் பங்களிப்பா????
கேட்டால் கூட்டணி தர்மம் என்ற சப்பைக்கட்டு.........

1996 களில் ஐக்கிய முண்ணனிஆட்சிக்கு வந்தபோது  யாரைப் பிரதமராக்குவது என்ற ஆலோசனையில் வி.பி.சிங் மற்றும் ஜோதி பாசுவின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு சில காரணங்களால் அது கைவிடப்பட்டு அப்போதைய ஐக்கிய முன்னணியின் கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.மூப்பனார் அவர்களின் பெயரை தெலுங்கு தேசம் உட்பட எல்லாக் கூட்டணிக் கட்சிகளும் பரிந்துரை செய்து ஆதரிக்க முன்வந்த நேரத்தில் ,தனது அரசியல் சாணக்கியத்தனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து அந்த பிரதமர் பதவியை தேவகவுடாவிற்கு கிடைக்க செய்த திமுக வின் கூட்டணி தர்மத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது .........

அன்று திமுக நினைத்திருந்தால் ஒரு தமிழனால் அந்தப்பதவி அலங்கரிக்கப்பட்டிருக்கும்........ இப்பொழுதுகூட
எங்கோ மேற்குவங்கத்திலிருந்து ஒரு பெண் ஒரு தமிழனை முதல்குடிமகனாக்க முயற்சி செய்கிறார்......
தமிழரையும் தமிழினத்தையும் காப்பதற்காக மட்டுமே தான் இந்த பிறவியை எடுத்திருப்பதாக கூறிக்கொள்ளும் கலைஞர் அவர்களுக்கு கலாமை ஆதரிப்பதில் என்ன சிக்கல்? பதவி ஆசையும் சுயநலமும் தானே......?
ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை அடுக்குமொழி சொல்லி அடுத்தவர்களை புண்படுத்தாமல் இருக்கலாமே.............
''கலாம் என்றால் கலகம்''  ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிர்ந்து கொள்ளச் செய்த பொக்ரான் சோதனையின் பிதாமகனுக்கு இவர் செய்யும் மரியாதை இதுதானா?

'' நாங்கள் ஒருமுறை சொன்னதை மாற்றிக்கொள்ள மாட்டோம் '' என்று எப்படித்தான் இவரால்  ஊடகங்களிடம் சொல்ல முடிகிறதோ...........?

இலங்கை போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ''ஒருமுறை'' இவர் இவர் சொன்னதை எந்தத் தமிழனாவது மறந்திருப்பானா?
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்........

கலாமை விடுவோம் அரசியல் சாயம் பூசாத தேச நலனில் அக்கறை உள்ள வேறு யாருமே இந்தியாவில் இல்லையா...........? சோனியா பயன்படுத்த மன்மோகன் என்ற ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போதாதா? ஜனாதிபதி நாற்காலியிலும் காங்கிரசின் கைப்பாவைதான் இருக்கவேண்டுமா?

2009 களில் ''எனக்கு வயதாகி விட்டது இனி தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை''யென அறிவித்த பிரணாப் முகர்ஜிக்கு 2012 ல் வயது குறைந்துவிட்டதா?

பதவி சுகம் என்ன சாதாரணமானதா? 1984 ல் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு தனக்குத்தான் பிரதமர் பதவி என்று தான் கண்டிருந்தகனவு பலிக்காமல் போனவுடன் கட்சியை விட்டே வெளியேறிய பிரணாப்பிற்கு 28 வருடங்களுக்குப் பிறகு கனவு வட்டியும் முதலுமாய் பலித்திருக்கிறது..........

வாழ்த்தித் தொலைவோம் வேறு என்ன செய்ய............


- அறந்தாங்கியான் -

2 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி......... நண்பரே......

      Delete